அவளைச் சந்தித்த இரவு
சிற்றோடை
மானின் ஓட்டமாக
அறைக்குள் ஓடுகிறது
பிரதேசகாடு அடர்ந்து
நெருங்கி
இரவின் இந்தப்பொழுதில்
அணைக்கிறது
மௌனம் பெருக்க
சிதறலாக ஓசை
ஆகாய அலங்காரம்
படுக்கையில்
சுடர்விடும் அதை
மார்பில் சரியவிடுகிறேன்
பால்நிலவில்
திராட்சைக் கனிகள்
பின்னிப்பிணைந்த அரவம்
இரண்டு மட்டும்
பிரக்ஞையில் நெளிகிறது
No comments:
Post a Comment