என்னைப் பற்றி சில
ஆட்டையாம்பட்டி சிறுவயதில் வளர்ந்த ஊர். 05 06 1951 - ல் சேலத்தில் பிறப்பு. பாரத ஸ்டேட் வங்கி சேலம் கிளை வேலை செய்த ஒரே இடம். சேலம் தமிழ்ச்சங்கம் இலக்கியப் பணியாற்றிய களம். 20 ஆண்டுகள் இலக்கியம் தெரியாதவர்களோடு போராடி வென்றது மகிழ்ச்சிதான்.
நவீன இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்ற சங்கம் சேலம் தமிழ்ச்சங்கம். நண்பர் குவளைக்கண்ணன் கூறியது போல ஒரே தற்காலத் தமிழ்ச்சங்கம். இனி முடியாது என்பதால் தமிழ்ச்சங்கச் செயலாளர் பொறுப்பிலிருந்து நிரந்தர விலகல்.
போதும் கூட்டங்களும் கூடிப் பேசியவையும். விருந்தாளிகள் போல் வந்து போன எழுத்தாளர்கள். தலையில் கிரீடமும் இலக்கியத் தலைமையும் எல்லா நேரமும் கோமளிகள் போல. வணிகச் சாமியார்களைவிட அதிக அலங்காரம்.
போதும் கூட்டங்களும் கூடிப் பேசியவையும். விருந்தாளிகள் போல் வந்து போன எழுத்தாளர்கள். தலையில் கிரீடமும் இலக்கியத் தலைமையும் எல்லா நேரமும் கோமளிகள் போல. வணிகச் சாமியார்களைவிட அதிக அலங்காரம்.
இவர்களுக்கு மத்தியில் அன்பாய் பிரியமாய் இப்போதும் இருக்கும் சில எழுத்தாள நண்பர்கள் நினைக்கின்றேன்.
போதும் க.வை வெளியில் வாருங்கள் என்பார் நண்பர் ஆனந்த் எப்பொழுதும். கோவைக்கு வந்த பின்பு அன்போடு பழகும் ஞானி, கனல்மைந்தன் சி.ஆர்.ரவீந்திரன் இவர்களை இந்த நேரத்தில் மனம் நினைகிறது. ஓம்சக்தி ஆசிரியர் திரு பெ.சிதம்பரநாதன் விஜயா பதிப்பகம் வேலாயுதம் இருவரின் அன்பும் மகிழ்ச்சி தருகிறது. கனல்மைந்தன் எனது சகோதரர் மாதிரி நெருக்கமாகிவிட்டார். கவிஞர் சிற்பி எட்டும் தூரத்தில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் சிலரோடு நெருக்கமாக இலக்கிய உறவுகொண்டது.... இலக்கியப் புரிதலுக்கு மேலும் வழி வகுத்ததாகக் கருதுகிறேன். சிறப்பாக காலச்சுவடு கண்ணன், பிரம்மராஜன், ஆனந்த், தேவதச்சன், ஹாலா, ஷாஅ, குவளைக்கண்ணன், மோகனரங்கன், நஞ்சுண்டன், சிபிச்செல்வன் சமீப கால எனது இலக்கியப் பயணத்தில் உண்மையோடும் அக்கறையோடும் வந்தவர்கள். நண்பர் ஷாஅ அவர்களால் திறந்துவிடப்பட்ட கதவு. மறைந்த கவிஞர்கள், மீரா, கந்தர்வன், பாலா ஆகியோரின் அன்பையும் பரிவையும் எல்லா நேரமும் நினைத்துப் பார்க்கிறேன்.
இதுவரையிலான நூல்கள்
''பொற்கைப் பாண்டியன் இல்லை'' 1984 டிசம்பர்
''கவி'' ஒரு கதைக்கவிதை. 1987 ஜூலை
''காதல்வெளி'' 1988 அக்டோபர்
''பிஞ்சுவிழிகளில்'' அக்டோபர் 1988
''வெண்மை ஒரு நிறமல்ல ஜூலை'' 1990
''கவிதைகளிலிருந்து கவிதை'' முந்தைய கவிதைகளின் தொகுப்பு
வேறு வேதம் அக்டோபர் 1997
உடலோடும் உயிர்
சிறுகதை
இடமாற்றம் - டிசம்பர் 1993குழந்தைகளுக்கான கதை
கண்மணிக்கு அப்பாவின் கதைகள் - ஆகஸ்ட் 1991நாவல்
மீண்டும் ஆதியாகி - பிப்ரவரி 2000ஆதிரை - ஆகஸ்ட் 2010
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை நூல்கள்
The New Wrecking Ball - July 1990
The Fifth Way - April 2000
( Both Translated by Vijay Elangova )
No comments:
Post a Comment