Ads 468x60px

Social Icons

என்னைப் பற்றி...


என்னைப் பற்றி சில


   ஆட்டையாம்பட்டி சிறுவயதில் வளர்ந்த ஊர். சேலம் பிறந்த ஊர். மாநிலக் கல்லூரி, விக்டோரியா ஹாஸ்டல் மறக்கமுடியாத இடங்கள். பாரத ஸ்டேட் வங்கி சேலம் கிளை வேலை செய்த ஒரே இடம்.

சேலம் தமிழ்ச்சங்கம் இலக்கியப் பணியாற்றிய களம். 20 ஆண்டுகள் இலக்கியம் தெரியாதவர்களோடு போராடி வென்றது மகிழ்ச்சிதான்.

நவீன இலக்கியத்திற்கான பயிலரங்கை தமிழவன் அவர்களோடு இணைந்து நடத்திய அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு நாட்கள் நடந்த நிகழ்வு. நவீன இலக்கியம் குறித்து இரண்டு நூல்கள் (தமிழவன், மோகனரங்கன் குவளைக்கண்ணன் தொகுத்தவை) வழங்கப்பட்டன. 600 மணவர்கள் தமிழ்நாடு தழுவிய அளவில் பங்கேற்றது ஆச்சரியம்தான். தமிழவன், தமிழ்ச்செல்வன், அ.ராமசாமி, ஆனந்த், மோகனரங்கன், பெருமாள்முருகன் குவளைக்கண்ணன் சிபிச்செல்வன் கலந்துகொண்டு மாணவர்களோடு சுதந்திரமாக உரையாடினர். சிறுசிறு குழுவாக பிரிந்து கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டுகளில் நவீன இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்ற சங்கம் சேலம் தமிழ்ச்சங்கம். நண்பர் குவளைக்கண்ணன் கூறியது போல ஒரே தற்காலத் தமிழ்ச்சங்கம். புத்தக விமர்சனம், workshop for poetry and short story,  கருத்தரங்கம், நூல்கள் வெளியீடு, எழுத்து இதழ் மீதான முழு விமர்சனப் பார்வை, யூ.ஆர்.அனந்தமூர்த்தி கலந்துகொண்ட நிகழ்வு அதில் வெளியிட்ட பல நூல்கள், 50க்கும் மேலாக கலந்துகொண்ட படைப்பாளிகள்,  பிரம்மராஜன் முன்னிருந்து நடத்திய இரண்டு கவிதை வாசிப்பு நிகழ்வுகள்.... கவிதைமீதான விரிவான விவாதங்கள், அற்றைத் திங்கள் கூட்டங்கள் என்று கடந்த பத்து ஆண்டுகளில் பநூறு கூடங்கள். எல்லாமும் தற்கால இலக்கியத்தை மையப் படுத்தி. ஒவ்வொரு முறையும் இலக்கியம் தெரியாதவர்களோடு போராட்டம் புறக்கணிப்பு.

இனி முடியாது என்பதால் தமிழ்ச்சங்கச் செயலாளர் பொறுப்பிலிருந்து நிரந்தர விலகல். போதும் கூட்டங்களும் கூடிப் பேசியவையும். விருந்தாளிகள் போல் வந்து போன எழுத்தாளர்கள். தலையில் கிரீடம், இலக்கியத் தலைமை எல்லா நேரமும் கோமாளிகள் போல. வணிகச் சாமியார்களைவிட அதிக அலங்காரம். சிலர் மீதான வெறுப்பு அழியாதிருக்கிறது. இலக்கிய ரீதியாக என்னை எதிர்ப்பவர்கள் மீது மதிப்பு கூடுகிறது.

இவர்களுக்கு மத்தியில் அன்பாய் பிரியமாய் இப்போதும் இருக்கும் சில எழுத்தாள நண்பர்கள் நினைக்கின்றேன். போதும் க.வை வெளியில் வாருங்கள் என்பார் நண்பர் ஆனந்த்.

கடந்த பத்து ஆண்டுகளில் சிலரோடு நெருக்கமாக இலக்கிய உறவுகொண்டது.... இலக்கியப் புரிதலுக்கு மேலும் வழி வகுத்ததாகக் கருதுகிறேன். சிறப்பாக காலச்சுவடுகண்ணன், பிரம்மராஜன், ஆனந்த், தேவதச்சன், ஹாலா, ஷாஅ, குவளைக்கண்ணன், மோகனரங்கன், நஞ்சுண்டன், சிபிச்செல்வன் இவர்கள் சமீப கால எனது இலக்கியப் பயணத்தில் உண்மையோடும் அக்கறையோடும் வந்தவர்கள். நண்பர் ஷாஅ அவர்களால் திறந்துவிடப்பட்ட கதவு இந்த இலக்கிய விரிவு.

மறைந்த கவிஞர் மீரா கந்தர்வன் பாலா ஆகியோரின் அன்பையும் பரிவையும் எல்லா நேரமும் நினைத்துப் பார்க்கிறேன்.

இதுவரையிலான நூல்கள்

''பொற்கைப் பாண்டியன் இல்லை'' 1984 டிசம்பர்
''கவி''  ஒரு கதைக்கவிதை. 1987 ஜூலை
''காதல்வெளி'' 1988 அக்டோபர்
''பிஞ்சுவிழிகளில்'' அக்டோபர் 1988
''வெண்மை ஒரு நிறமல்ல ஜூலை'' 1990
''கவிதைகளிலிருந்து கவிதை''   முந்தைய கவிதைகளின் தொகுப்பு
வேறு வேதம் அக்டோபர் 1997
உடலோடும் உயிர்

சிறுகதை

இடமாற்றம் - டிசம்பர் 1993

குழந்தைகளுக்கான கதை

கண்மணிக்கு அப்பாவின் கதைகள் - ஆகஸ்ட் 1991

நாவல்

மீண்டும் ஆதியாகி -  பிப்ரவரி 2000
ஆதிரை - ஆகஸ்ட் 2010

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட கவிதை நூல்கள்

The New Wrecking Ball - July 1990
The Fifth Way - April 2000
( Both Translated by Vijay Elangova )

No comments:

Post a Comment