Ads 468x60px

Social Icons

Sunday 7 October 2012

அசாதாரணமான உள்ளடக்கம்



அசாதாரணமான உள்ளடக்கம் 

அதற்கு தக்க மாதிரி இறுக்கமான நடை சி.மணி -

 'மீண்டும் ஆதியாகி' நாவல் குறித்து


இந்த மொழி இறுக்கம் எப்படிக் கிடைத்தது?

இந்த வழிகளில்......

சொல், தொடர், வாக்கியம் என்று மூன்று கூறுகள் உண்டு. இவற்றின் ஒவ்வொன்றின் அளவும் கட்டுப்படுத்தப்படலாம்.

எ கா
மாலை / சாயங்காலம்;
மயக்கும் பொன்மாலை / மயக்கம் தருகிற பொன்னான மாலைப்பொழுது;
மனிதன் சாகிறான் / எந்த வயதிலும், எந்த வியாதியிலும் மனிதன் சிரமப்பட்டு, சந்தோஷத்தோடு செத்துக்கொண்டிருக்கிறான்;

மனிதன் மனிதனைக் கொல்கிறான் / சில நேரங்களில் பலவீனமான வயதான மனிதன் பலசாலியான இளம் வயது மனிதனை கொல்ல முடிந்தபடி இருந்து கொண்டே இருக்கிறது.

இவ்வாறு சொல் பொறுத்தவரை, நீண்டது சிறியது என்று தெர்ந்து எடுக்கலாம். ஆனால் சொல் இறுக்கம் தருவது அபூர்வம்; கவிதையிலும் கூட.

தொடர் பொறுத்தவரை நீண்டது, சிறியது என்று தெரிவு செய்யலாம். உருபுகள், அடைகள் என்று சேர்த்து தொடரின் நீளத்தை அதிகப்படுத்தலாம். இவ்வாறு அடைமொழி, குறைத்தும் சிறியதாகப் பயன்படுத்தியும், தொகை என்கிற (வேற்றுமை, உவமைத்தொகை) மாதிரி பயன்படுத்தியும் சிறியதாக்கலாம். 

வாக்கியத்திலும் இப்படி நீண்டது, சிறியது என்று தேர்வு செய்யலாஅம். சொல்லுக்கு பதிலாக நீண்ட சொல் அல்லது தொடரும், நிறைய நீண்ட தொடர்களும், வேற்றுமை விரி, உவமை விரி மாதிரி பயன்படுத்தியும் வாக்கிய நீளத்தை அதிகரிக்கலாம். இப்படி தொடருக்குப் பதிலாக சொல் பயன்படுத்தியும், தொடர்களே பயன்படுத்தாமலும் வாக்கியத்தைச் சிரியதாக்கலாம். எர்னல்ட் ஹெமிங்வே போல வினையடையும் பெயரடையும் பயன்படுத்தாமலும் இறுக்கம் தரலாம்.

இலக்கணப் பார்வையில் வாக்கியம் என்பது எழுவாய், பயனிலை என்று இரண்டு பகுதிகள் கொண்டது. பயனிலை என்பது வினைச்சொல், செயப்படுபொருள் உடையது. இவற்றில் எழுவாயாக ஒரு சொல் / நீண்ட சொல் / நீண்ட தொடர் என்று பயன்படுத்தலாம்; இதே மாதிரி செயப்பாட்டு பொருளுக்கும்  வினைச்சொல் என்பது செயப்படுபொருள் குன்றிய வினை / குன்றாத வினை, செயப்பாட்டு வினை / செய்வினை, தன்வினை / பிறவினை என்று பயன்படுத்தலாம். வாக்கியத்தின் நீளத்தை கட்டுப்படுத்த அல்லது சிறியதாக வைத்துக் கொண்டு இறுக்கத்தை அதிகரிக்க தன்வினை, செய்வினை, செயப்படுபொருள் குன்றிய வினை, பயன்படுத்தியும், பெயரடையும் வினையடையும் பயன்படுத்தாமலும் வினைமுற்றுக்குப் பதிலாக வினையெச்சம் பயன்படுத்தியும் பெறலாம்.

இவற்றுள் பலவற்றை க.வை.பழனிசாமி கையாள்கிறார். (எ கா) முதல் அத்தியாயத்தின் முதல் பத்தியைப் பார்க்கலாம்.

'உயிர் வாழும் தேவையின் அதிர்வு எல்லாவற்றிலும். கடல்வாழ் உயிரின் பெரிய வாயி ஒருநூறு சிறிய உயிர்கல். வலிய நாலு கால் விரித்து உயிர் கவ்வும் விலங்கு. நீர் மூழ்கி உயிர் கொத்திப் பறக்கும் பறவை. நீண்ட நாகம் விழுங்க, உள்நகரும் உயிர் முறிந்த உடல்கள். உயிர் மென்று உணவு ருசிக்கும் ஒருதூயிரின் உடலின்மீது கூட்டமாகக் கவிழும் சிறு உயிர்கள். உடல் வலித்துக் கத்தும் உயிரின் ஓசை துறந்து அதன் உடல் சுவைக்கும் மனிதன்'

இதில் ஏழு வாக்கியங்கள்; முதல் ஐந்து வாகியங்களில் வினைமுற்று இல்லை. ஆறாவது வாக்கியத்தில் இருக்கிற கவிழும் என்கிற சொல்லை வினைமுற்றாகவும் வினையெச்சமாகவும் கொள்ளலாம். அதனால் பொருள் மயக்கம் ஏற்படுகிறது. பொதுவாக வினைமுற்று வாக்கியத்தின் கடைசியில் வரும், அப்படிக் கடைசியில் வரவேண்டிய அவசியம் இல்லை என்றாலும் கூட. ஆனால் கவிழும் இடையில் வந்திருக்கிறது. அது படர்க்கை ஒருமை எதிர்கால வினைமுற்றாக இருக்கலாம்; அல்லது கவிழுகிற என்கிற அர்த்தத்தில் வரும் வினையெச்சமாக இருக்கலாம். இங்கே இந்தச் சொல் வருகிற இடம் இந்தக் கேள்விக்குரிய பதிலை நிச்சயப்படுத்தக் கூடிய இடமாக இல்லை. ஏழாம் வாக்கியத்தில் வலித்தல், கத்துதல், துறத்தல், சுவைத்தல் என்று நான்கு வினை வேர்கள். இவை நான்குமே வினையெச்சமாக வருகின்றன.


முதல் பத்தியிலே இப்படித் தொடங்குகிற இந்த நாவலின் அடுத்த பத்தியிலே, முதல் வாகியம் பின்வருமாறு.

'பரந்த பூமிவெளியெங்கும் வாழும் உயிர்களிடை உயிர் பறிக்கும் உணவு வேட்கை'.

சாதரணமாக இதை இப்படித்தான் எழுதுவோம். இந்த பரந்த பூமியின் வெளியெங்கும் (பூமிவெளியில் எங்கும்) வாழும் (வாழுகிற) உயிர்களின் இடையில் உயிரை பறிக்கும் உணவு வேட்கை இருக்கிறது.

இந்த இரண்டு வாக்கியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நான் சொல்கிற சில அம்சங்களை பார்க்க முடியும். திரு க.வை.பழனிசாமி எப்படித் தன் வாக்கியத்தை சிறிதாக்குகிறார், அதனால் இறுக்கமாக்குகிறார் என்று தெரிய வரும்.

'வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலை தழிஇய தலைக்காவிரி' என்று தொடங்குகிற பட்டினப்பாலை பாடல் நானூறு வரிகளுக்குப்பால் வினைமுற்றோடு முடிகிறது. இறுக்கமாக எழுதப்படுகிற இடங்களிளெல்லாம் இப்படி வினைமுற்றுக்குப் பதிலாக வினையெச்சம் வந்திருக்கிறது.

No comments:

Post a Comment